Friday, July 22, 2011

எல்லாம் இருக்கின்றன...

முனியம்மாள் அக்காள் அரைத்த மாவு உரல்....
அம்மாவோட பாக்கு உலக்கை....
அப்பாவோட உடைந்த கண்ணாடி..
சின்ன அண்ணன் உறிஞ்சிப் போட்ட சிசர்ஸ் துண்டு...
பெரிய அண்ணன் உட்கார்ந்து படித்த தோட்டத்து திண்ணை ...
பெரிய அக்கா கொடுத்த மலேசியா சட்டை..
சின்ன அக்கா கொடுத்த சிகப்புகரை வேட்டி ...
எல்லாம் இருக்கின்றன...இவர்கள் இருந்ததைச் சொல்ல..

5 comments:

ஹேமா said...

சித்தப்பா எப்பிடி இருக்கீங்க.சுகம்தானே.கன காலத்துக்குப் பிறகு உங்களைப் பார்க்கிறேன்.பாரா அண்ணாவும் பிஸியாயிட்டார்.வரமாட்டார் என் பக்கம்.பேசறதுமில்ல சித்தப்பா !

உங்க கவிதை சாயலா நானும் ஒரு கவிதை எழுதி வச்சிருக்கேன் சித்தப்பா.வாழ்க்கை ஓடிக்கிட்டேதானே இருக்கு.நினவுகளை மட்டும் மடக்கிப் பிடிச்சு அதில இருக்கிற சந்தோஷங்களோட பேசிட்டு இருக்கோம்.வாழ்வின் இயல் இதுதான்.மனம் பக்குவப்படுது சித்தப்பா !

அண்ணாதுரை சிவசாமி said...

தாயே...உன்னுடைய எழுத்துக்களைப் பார்த்ததும் என்னையறியாமல் குமுறி அழுதுவிட்டேன்.வயதாகிவிட்டதாலோ...செய்யவேண்டிய கடமைகளை நினைத்தோ...தெரியவில்லை.இறந்த காலத்தை நினைக்காமல்,வருங்காலத்தை கருதாமல் நிகழ் காலத்தில் வாழ்பவர்கள் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள்.நான் ஆசிர்வதிக்கப்பட்டவன் இல்லை போலும்.ராஜாவிடம் விசாரிக்கிறேன்.அன்பு மகளுக்கு எனது ஆசிர்வாதங்கள்.

பா.ராஜாராம் said...

கண்கள் கலங்கிவிட்டன .ரெகுலரா எழுதுங்க சித்தப்பா


ஹேமா, சித்தப்பா அன்றே போன் பண்ணி சொல்லி விட்டார். கொஞ்சம் வேலைகள். வேறு ஒன்னும் இல்லை. இனி வர்றேன் சரியா?

அண்ணாதுரை சிவசாமி said...

ரொம்ப நாள் கழித்து ஹேமாவின் எழுத்தை பார்த்ததும் உணர்ச்சி
வயப்பட்டு விட்டேன்.இபவும் வெளியில் எங்கும் செல்ல முடியாதலால்
மனம் இங்கும் அங்கும் அலை பாய்கிறது.கடைசியாக பிறப்பது சின்ன
வயதில் செல்லமாக இருந்தாலும் நெருங்கிய உறவுகளுக்கு விடை கொடுக்கும் போது மனது உடைந்து போய் விடுகிறது.எங்களுக்கு பரவாய் இல்லை.ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள முடிகிறது.நீ பாலு அண்ணன் மாதிரி தைரியமானவன்.கடவுள் இன்னும் உஅனக்கு தைரியத்தை கொடுக்கட்டும்.
முக்கியமான விஷயம். கண்ணனிடம் சொல்லி உன்னை FACE BOOK ல்
சேர்க்கச்சொல்.நம் பிள்ளைகள் எல்லோரும் அதில் உள்ளார்கள்.ஒருவரோடு ஒருவர் பேசிக்கொள்வது உனக்கும் ஒரு தைரியத்தையும் சந்தோசத்தையும் கொடுக்கும்.

Kannan said...

அந்த திண்ணையில் நான் படுத்து தூங்க வேண்டும் சித்தப்பா, சீக்கரமா வர பாக்குறேன்

Post a Comment