Saturday, August 14, 2010
நெஞ்சு பொறுக்குதில்லையே...நிலைகெட்ட மனிதரை நினைத்துவிட்டால்..
ஏனோ ஞாபகத்திற்கு வந்து தொலைக்கிறது.செக்கிழுத்த சிதம்பரனாரையும் சுதந்திரப் போராட்ட வீரர் என்று சொல்கிறோம்.
பாரதியையும் அப்படிச் சொல்கிறோம்!கொஞ்சம் ஒதைக்கிறமாதிரி இல்லை.சொல்வதொன்று...செய்வதொன்று....'நித்திகள்' எல்லா காலங்களிலும் இருந்துகொண்டுதான் இருந்திருக்கிறார்கள்.
After the end of World War I, Bharathi entered British India near Cuddalore in November 1918. He was arrested and imprisoned in the Central prison in Cuddalore in custody for three weeks - from 20 November to 14 December.
He was released after he was prevailed upon to give an undertaking to the British India government that he would eschew all political activities. To those who had heard Bharathi's song Acham Illai, Acham Enbathu Illaiye, Bharathi's letter of apology to Lord Pentland, Governor of Madras will surface Bharathi's all too human frailty -
OM SAKTHI
District Jail, Cuddalore
28 November 1918.
To His Excellency Lord Pentland Governor, Fort St. George
The Humble petition of C. Subramania Bharathi.
May it please your excellency.
It has been more than a week now since I was arrested at Cuddalore on my way from Pondicheery to Tinnevelly which is my native district. After many loyal assurances on my part as your Execellency may well remember the Dy. I. G. (CID) was sent by your Excellency's Government a few months back to interview me at Pondicherry. The Dy. I G after being thoroughly satisfied with my attitude towards the Government asked me if I would be willing to be kept interned purely as a war measure in any two districts of the Madras Presidency during the war.. I could not consent to that proposal, because having absolutley renounced politics I see no reason why any restraint should be placed on my movement even while the war lasted.
Now that the war is over and with such signal success to the Allies, I ventured to leave Pondicherry, honestly believing that there would be absolutely no difficulty whatsoever in the way of my settling in British India as a peaceful citizen.. Contrary to my expectations however I have been detained and placed in Cuddalore District Jail under conditions which I will not weary your Excellency by describing here at any length BUT which are altogether diasgreeable to a man of my birth and status and full of dangerous possibilities to my health.
I once again assure your Execellency that I have renounced every form of politics, I shall ever be loyal to british Government and law abiding.
I therefore beg of your Excellency to order my immediate release. May God grant your Excellency a long and happy life.
I beg to remain
Your Excellency's most obedient servant.
C. Subramania Bharathi
Wednesday, December 16, 2009
Monday, November 23, 2009
இயல்பு
ஆசைப்பட்டது.....
வெயிலிலும்
மழையிலும்
நனையாமல்
இருக்க
மரம் ஓன்று
ஆசைப்பட்டது.....
நிழலில்
இருக்க
நிலவு
ஆசைப்பட்டது.....
நெருப்பில்
குளிக்க
விளக்கு
ஆசைப்பட்டது.....
இருட்டில்
இருக்க
மனிதனாக
இல்லாமல்
இருக்க
மனிதன்
ஆசைப்பட்டது.....
போல்.
Friday, October 30, 2009
அறிதலும்,உணர்தலும்......வாழ்தலும்....
வாசித்து அறிந்தேன்.
பின்....
வாசித்து உணர்ந்தேன்.
பின்னர்....
உணர்ந்து வாசித்தேன்.
பிறகு...
வாசித்து இருந்தேன்.
இனி...
வாழ வாசிப்பேன்...
எல்லோரும் போல
மறு ஜென்மம் ஒன்றில்...
மறுபடியும் மறுபடியும்.
Saturday, September 5, 2009
என்ன செய்யப் போகிறோம்.....
1932ல் பேச ஆரம்பிச்ச அந்த மாயப் பிசாசு செஞ்ச வேலை கொஞ்சமா நஞ்சமா? அதிலேயே ஊறப்போட்டு ஊறப்போட்டு, அப்புறம் அதிலேருந்து விடுபடணும்னு நினைச்சு என்னையே நானே நல்லா ஒதறி ஒதறி கம்பியிலே காயப் போட்டாலும், வாசம் போக மாட்டேங்குதே என்ன...பண்ண?
'பெட் லேன்ட்' 'பெட் லேன்ட்' ன்னு ஒருத்தரை கேள்விப் பட்டு இருக்கீங்களா? பாவம், தம் உள்ள ஆளு கோவனத்தைக் கட்டிக்கிட்டு தனி ஆளா நீச்சல் அடிச்சும், வத்தையிலே துடுப்பை வச்சுக்கிட்டு நாலு அஞ்சு பேரா ராமநாதபுறம் கடல் எல்லையிலிருந்து, ராமேஷ்வரத்திற்கு போய்க்கிட்டிருந்த நம்மளை 1914 ஆம் வருஷம் பிப்ரவரி மாசம் 24 ஆம் தேதி 'பாம்பன் ரயில்' பாலத்தை திறந்து வச்சு, நூறு இரநூறு பேரா ஒரே நேரத்தில் சௌரியமா ராமேஷ்வரத்திற்கு போக வச்ச பெரிய மனுஷன். அரசாங்க வேலையிலே சாதாரண குமாஸ்தாவா இருந்த ராமானுஜத்தை, ஸ்ரீ ராமானுஜத்தை கணித மேதை என்று அடையாளம் கண்டு இன பேதம் பார்க்காமல் மேல் படிப்புக்குக்காக அரசாங்க செலவில் லண்டன் அனுப்பி வச்ச பெருந்தன்மையான மனுஷன். பிரிட்டன் அரசிடம் போராடி அனுமதி பெற்று தன் காலத்தில் ஒரு ஜெர்மன் எஞ்சினியரைக் கூட்டிக்கிட்டு வந்து 600 பேரை வச்சிக்கிட்டு 2 வருசத்தில் அபாயகரமா அப்ப கருதப்பட்ட அந்த வேலையிலை ஒரு உயிர் சேதம் இல்லாமல் 20 லட்ச ரூபாய் செலவில் கட்டிமுடிச்ச மனுஷன். ஆச்சு, அஞ்சு வருஷம் போனா நூறு வருஷம் ஆச்சு. பிரபு பெட் லேன்ட். 'THE LORD PETLAND' 1912-1919 ல் சென்னை மாகாண கவர்னர் ஆக இருந்தவர். வேலை மெனக்கிட்டு இப்ப இவரை பத்தி பேச்சு எதுக்கு.
"On the general poverty of the masses, Pentland remarked that laborers of Madras city had the habit of frequenting cinema halls to watch movies and suggested that this could be one of the possible reasons for their poverty.Pentland's statement also hints at the possibility of a drastic increase in the number of cinema goers during his Governorate."
எப்ப சொல்றாரு, 1919 ல். ஊமைப் படம் வந்த போது. படம் ஓடிக்கிட்டு இருக்கும், ஒரு ஆளு நீட்டக் கம்பா திரையிலே வச்சு வச்சு நடக்கிற சீனை கதாபாத்திரங்கள் சிரிக்கவேண்டிய நேரத்தில் சிரிச்சும், அழ வேண்டிய நேரத்தில்தொண்டை கிழிய அழுதும் விளக்கிக்கிட்டு இருந்தப்ப.
எனக்கு என்ன சந்தேகம்னா, ஒரு சின்ன விசயம்தான். பேசும் படம் வந்த பின் நல்லவனா நடிக்கிறவன் நல்லவன், கெட்டவனா நடிக்கிறவன் கெட்டவனாகத்தான் இருக்கமுடியும்னு ஒரு சைக்காலஜிகளா நம்ம பயலுகளே ஒரு அஞ்சாறு கோடி மக்களை நம்ப வைக்க முடியும்னு ஆதார பூர்வமாக நிரூபித்து காட்டியிருக்காங்கே. வெள்ளைக்கார பயலுக நரிப்பயலுக, அவைங்களுக்கு எப்படி இந்த யோசனை வராமப் போச்சு! அதுவும் 1919 லேயே நம்ம ஜாதகத்தை தெளிவா கணிச்சுட்டு. கொஞ்சம் ஏமாந்துட்டாய்ங்க. கடைசியா கவர்னர் ஜெனரலா இருந்தாரே அவர் பேரு கூட...ஆமாம் லார்ட் மௌன்ட்பேட்டன். முழுப்பேரு Louis Francis Albert Victor Nicholas Mountbatten,



"ரொம்ப வேணாம்யா ரொம்ப வேணாம், நூத்திலே ஒரு பங்கு நமக்கெல்லாம் வரணும்யா!" இதை நம்ம மனோரமா ஆச்சி சொல்றமாதிரி மனசுக்குள்ளே ஒரு தடவைக்கு ரெண்டு தடவை சொல்லிபார்த்துக்கிட்டேங்கன்
"சுடலை மாடன் இசக்கி பேச்சி
பிரம்ம சக்தி முண்டன் முனியன்
உச்சி மாகாளி மாரியம்மன்
வடக்கு வாசிசெல்வி பத்ரகாளி
முத்தாரம்மன் பூதத்தான் சங்கிலி
இன்னபிற பெயரில்லாப்
பூடங்களும் ...."
ஆகிய இன்ன பிறவற்றை ஆஸ்திகராக இருந்தால் ஒவ்வொருத்தரும், என்னையும் சேர்த்துத்தான் மனசுக்குள்ளை நினைச்சுக்
"அந்த சின்னப் பையனான ஸ்ரீ ரமேசுக்கு வந்த விபரீத எண்ணம் எனக்கும், என் குடும்பத்தை சேர்ந்த எல்லோரையும் தவிர வேறு எவனுக்காவது வரணும்”னு வேண்டிக்கிரனும்.
கதை, கவிதை, கட்டுரை, பின்னூடங்கள் ஏனைய பிறவற்றை எல்லாம் எழுதி முடித்துவிட்டு நேரம் கிடைக்கும் போது கீழே உள்
எண்ணத்தை:
"சாலை ஓரத்திலே..
சில வேலை அற்றதுகள்...
வேலை அற்றதுகளின்...
நெஞ்சிலே......
சில விபரீத..எண்ணங்கள்..
வேந்தே...!
அது....காலனின்...குறி!"
அண்ணா சொன்னாரே, அந்த விபரீத எண்ணத்தை தற்போது சர்வ சாதாரணமாக நடந்து கொண்டிருக்கும் வாழ்வியல் சம்பவங்களில் ஒன்றை படித்துப் பாருங்கள். ஒரு வேளை அந்தப் பையன்,
"DO THE THING
YOU FEAR.
AND THE DEATH OF
FEAR IS CERTAIN."
என்ற நார்மன் வின்சென்ட் பீலின் வாசகங்களைப் படித்தி
மனக் குரங்கு ஊர் சுற்றக் கிளம்புகிறது.."
இப்ப எனக்கு டேர்ன் மாறி இருக்கு. மனக்குரங்கு உறங்குகிறது. மனச்சாட்
இந்த தொடர்புச் சங்கிலியை உங்கள் நண்பர்களுக்
அனுப்பி வையுங்கள். அட, ஒன்னு ரெண்டு பேருக்காகவாவது மனச்
சாட்சி ஊர் சுற்ற கிளம்பாமலா போய் விடும், பார்க்கலாம்.
Monday, August 17, 2009
தொடக்கப்பள்ளி
கருவேல நிழலில், பதிவர் பா.ரா. ஒரு தொடக்கப்பள்ளியின் படத்தை வெளியிட்டு, அதற்கு ஒரு கவிதையும் எழுதக் கேட்டிருந்தார். என்னாலான ஒரு முயற்சி கீழே... [படம் - கருவேல நிழல் பதிவில் இருந்து எடுக்கப்பட்டது. உபயோகப்படுத்த அனுமதித்த பா.ரா. அவருக்கு நன்றிகள்!]
புளியங்கொட்டையில்
ஒன்னயும் ரெண்டையும்...
உயிரையும் மெய்யையும்..
உண்டாக்கி காட்டிய..
புஷ்பவள்ளி டீச்சரிலிருந்து..
'சிவகாசி செல்வராசு வாத்தி...
சீதா லட்சுமி..
முத்து லட்சமி..
ஐந்தாவதில் சொல்லவைத்து
இருபது வயது வரை..
'இயேசு அறிய..'
உண்மை சொல்லும் போதெல்லாம்
சொல்ல வைத்த...
ஞானப்பிரகாசம்...
காதல் மன்னன் கதிர்வேலு...
கூத்தான்டான் குரங்கு வாத்தி..
"என் சிந்தை நோயும் தீருமோ"
மறக்கவே முடியாத...மருதகாசி
பாட்டு மெட்டில்....
"மேலான தெய்வம் தாயடா..
உண்மைக் கோவில் அவளடா..
பாராட்டினாள் சீராட்டினாள்..
உண்மை அன்பை ஊட்டினாள்..."
பாட்டமைத்து..நாடகம் நடத்தி
பாதியிலே..பறந்து சென்ற ஜான் வாத்தி..
சுடுமூஞ்சி..சுப்பய்யா...
ஒல்லி வாத்தி...உலகநாதன்..
கம்யூனிஸ்ட் ஷண்முகம்...
"சட்டிப்பீ..தின்பே..
ஓ வாயிலே..தர்ப்பைப்
புல்லை போட்டு பொசுக்க"
பதில் வராத போதெல்லாம்..
பண்புடன் சொல்லும் ராமுடு..
"அடுத்தவனைக் கெடுத்தவன்.."
வருகைப் பதிவேட்டை..
வாசிக்கும்போது..
அடுத்த பெயரை..அழைக்க..
அழகுடன்..வாசிக்கும்...
ஆரோக்கிய சாமி...
வழுக்கை தலை..வருதுடோ..
சூனாக்கீனா..சு.கிருஷ்ணமூர்த்தி...
அழகான ஹிந்தி டீச்சர்...
(பெயர்..எப்படி மறந்தேன்)
அனுமார் கோவிலில் சந்தித்து
அம்பலமான கிசு கிசுவில்..
அகப்பட்ட 7E...ரங்கராஜன்...
தொந்தி ஜெயராமன்...
ஒயிட் அன்ட் ஒயிட்..
பாஸ்கர சேதுபதி...
தஸ் புஷ்..தஸ்தகீர்..
சீனியாரிடி செய்த வினையால்
பிசிகல் டைரெக்டர் ஆன..
ஓமக்குச்சி சைஸ்
'பயில்வான்' ஆறுமுகம்..
'மண்ணாங்கட்டி'மரியஜெகம்...
'நீக்ரோ'நீலமேகம்...
'கிட்டி'கிருஷ்ணமூர்த்தி..
'மொரட்டு'முத்துக் குமார்..
'கலாட்டா' கருப்பையா
ஆசிரியராக அறிமுகமாகி...
திறமையால்..மேஜராகி
சைனாப் போரில் காலமாகி...
மறக்கவே முடியாத..
'வெள்ளை' சே ஷாத்ரி
'செவிட்டு' சே ஷாத்ரி
மோதிரத்தை திருப்பி வைத்தாலே...
அரை வாங்க தயார்நிலையில்..
'கரடி'சே ஷாத்ரி....
"ஹாரப்பாவைப் பாரப்பா..
நாகரீகத்திற்கு முன்னோடி..
நாங்கப்பா..மறுக்க முடியுமா..
'உலக' ப்பா...."
சரித்திரம் நடத்தும்போது
சிதறிவிட்ட...'குட்டை' நாகராஜன்...
'வானம்பாடி' படத்தை..பார்த்து
'கங்கைகரைத்..தோட்டத்தை'
கட்டைக்குரலில் பாடி...
கதறடித்த..மொக்கைப் பிச்சை..
ஆறு பிள்ளைகள் அடுத்தடுத்து
'அஞ்சலியாகப்' பிறந்தாலும்
காவி வேட்டி...தும்பைப் பூ சட்டை
துவைக்க மட்டுமே முடிந்த ...
தூய்மையான ..அங்கவஸ்திரம்..
துயரம்..தெரியாமல்..
தொங்கியே நிற்கும் தூய்மையான
புன்சிரிப்பு..தகர்க்கவே முடியாத
தட்சிணா மூர்த்தி புலவர்...
"என் மாதிரி இருப்பாரா
பாரதிதாசன்?"
பட்டை மீசையுடன்
புரியாத பார்வையுடன்
புலவர் இளங்கோ..
தனக்கும் புரியாமால்..
எங்களுக்கும்..புரியாமால்
கணக்கெடுத்து..பதற வைத்த
கட்டைக் குரல் பழனி...
பொறுக்க முடியாமால்...போராடி
மாற்றி...அல்ஜீப்ராவை...அறிய
வைத்த...சம்மர் கிராப் சந்திர சேகர்...
"என்னப்பா..எப்படி இருக்கே.."
தொண்ணுத்தெட்டு வயதிலும்...
தொய்வறியா நெட்டை
வரதராஜக் கோன்....
"தெள்ளிய தேனில்..
சிறிதொரு நஞ்சையும்...
சேர்த்த பின் தேனாமோ!
நன்னெஞ்சே!
சேர்த்த பின் தேனாமோ?"
பாரதியே வந்து நின்னு...
கடவுளை வாழ்த்தும்..
கோட்டு வேட்டி...
கண்ணுசாமி....
"தொண்டான்" என்றாலே...
தொடையெல்லாம்..
நடு நடுங்கும்....
வெங்கலக் குரலுடையோன்
வெட வெடத்த
வெங்கடகிருஷ்ணன்
காலை மாலை..கணீர் குரலில்
தங்கத் தமிழை பன்னீராக
வெளியே தெளித்து
ஆறுமணிக்கு..தண்ணியை..
உள்ளே தெளித்து..
சிவன்கோவில் வாசலிலே..
உள்ளே போனால் ஆச்சாரம்
போய் விடுமாம்...
'தண்ணி'வாசம்...சாமிக்கு..
தெரிஞ்சுடுமாம்....
கழுத்தில் கலர் கலர் துண்டுடன்..
கர்நாடக இசையில்...
கலங்கடிக்கும் வேதைய்யா...
கோல்ட் பிளேக் சிகரெட்டை..
அரைமணிக்கு ஒன்றாக..
அடிக்கின்ற..அனந்தகிருஷ்ணன்..
மலங்க..மலங்க முழிப்பதால்
'மலங்கன்'மதனகோபால்
கதை சொல்ல மாட்டாரா...
காலமெல்லாம்...
ஏங்கவைத்த ராமைய்யா
"தண்ணியில்லாமல் நெல்லு வெலைய
வழியொன்று காண வேணும்..
அப்பவே சொன்ன.....
அய்யா மாதிரி....
கையடக்கப் பெட்டியில்....
கனதூரம்...பேசவேணும்..."
காணும் போதெல்லாம்
சொல்லும்....
வெள்ளைக் கோட்டு சூட்டு...
வெங்காயப் பிரியனான..
பெரியாரின் பிரியன்...
நல்லதைத்தவிர வேறொன்றும் அறியா..
தலைமை வாத்தி...
நாராயணன் சேர்வை...
தொலைக்க முடியாத பெயர்கள்..
தொடக்கப் பள்ளி என்றதும்....
பள்ளி இறுதிவரை...
தொடர்ந்து....
நினைவில் வந்து.....
தூக்கத்தை
தொலைத்த பெயர்கள்.............................................
வாசலில் என்ன சத்தம்.....
ஓ! வந்தது நீதானா!
எத்தனை முறை...
சொல்வதுனக்கு...
வேண்டாம் வேண்டாம் என்றால்...
விளங்காதா உனக்கு.....
மறுபடியும்..சொல்கிறேன் கேள்...
மடி நிறைய பணம்.... வேண்டாம்...
மாட மாளிகை............ வேண்டாம்...
கூட கோபுரம்..............வேண்டாம்..
மனைவி மக்கள் ........வேண்டாம்...
மறுபடியும் என்னை...
ஒரு முறை...
ஒரே ஒருமுறை.... இவர்களுக்கு..
மாணவனாக்க முடியுமா....
சொல்...
முடியுமென்றால்....
காணிக்கை பேரம்....கலந்து பேசி
முடிவு செய்வோம்.....
முடியாதென்றால்....
வாசலில் நின்று
வம்பேதும்...பண்ணாதே....
வெளியில்....
வேலையிருக்கு...
சற்றே...விலகி ...நில்
சர்வேசா!
Monday, June 29, 2009
கொள்ளிவாய் பிசாசும்....கிறித்துவ சுடுகாடும்
சின்ன வயதில் நான் ரொம்பப் பயந்தவன். இப்ப என்ன வாழுது.அறுபது வயதிலும் அப்படித்தான்.தெனாலியில் கமலுக்கு மாதிரி எல்லாவற்றிலும் பயம்.சின்ன வயதில் நான் பயந்ததற்கான காரணங்களைச் சொன்னால் நம்பமாட்டீர்கள். மதுரை மேலாவாணி மூல வீதிதான் எங்களுக்கு பூர்வீகம். இந்தகடசியிலிருந்து அந்தக்கடசிவரை வீடுகளுடன் வாழ்ந்ததாக பெருசுகள் சொல்வார்கள். எப்பவாவது அந்தப்பக்கம் போகும் போது இன்னும் சிதலம் மாறாமல் அப்படியே இருக்கும் அந்த பெரிய வீட்டை "உள்ளே நுழைந்து தாவாரத்தை தாண்டியவுடன் பெரிய ஹாலு, அதிலேதேக்கு ஊஞ்சல்லை ஆடிக்கிட்டே மாமனாரு வெத்திலை பாக்கை இடிச்சு போட்டுக்கிட்டிருப்பாரு. உங்க அப்பா முதக்கொண்டு கையிலே துண்டை மடிச்சு போட்டுக்கிட்டு நிப்பாக. எப்படியாவது அந்த வீட்டை வாங்கிடனுப்பா.வாங்கின செட்டியாரு வாக்கு தவறாத பெரிய மனுசனப்பா.எப்ப வந்து உன் வாரிசு யார் கேட்டாலும் நியாமான விலையை கொடுத்திட்டு எடுதுக்கிரட்டும் பொன்னுசாமின்னு சொன்னாருப்பா " என்று மாமனாரின் பெயரை சொல்லும் போதெல்லாம் ஒருவிதமான பதட்டத்துடன் 94 வயது வரை சொல்லிக்கொண்டிருந்த எங்க அம்மாவையும், உணர்வுகளுக்கு மரியாதை கொடுத்த செட்டியாரையும் நினைத்த படியே கடந்து செல்வேன். அண்ணன்கள் அக்காக்கள் பிறப்பதற்கு முன்னரே அப்பாவின் வேலை மாற்றத்தினால் அம்மாவழி தாத்தாவின் கிராமத்திற்கு மாற்றி வந்து விட்டோமாம்.அங்குதான் நான் பிறந்தேனாம்.
நான் பிறந்த ஊர் சின்ன கிராமம்தான். பள்ளியிலும், கல்லூரியிலும் படித்தது கிராமத்திலும் ரெண்டு கி.மீ.தூரத்திலிருந்த டவுனுலிம்தான். சுவாரஸ்யமாகவும் சி.டி.யிலும், டி.வி.யிலும் ரீவைன்ட் பண்ணி பார்க்கிறோமே அதுமாதிரி முடிந்தால் உடனடியாக பார்க்கத்துடிக்கும் அற்புதமான காலமது.ஒருவேளை இப்பொழுது நடப்பதை ஒரு பத்து வருடம் கழித்து நினைத்து ஏங்குமோ மனசு, தெரியவில்லை.இயல்பாக கிடைப்பதுதான் மனசுக்கு எப்பவுமே பிடிக்காதே.
எட்டாவது ஒன்பதாவது படிக்கும் வரை பகலில் தைரியமாக டவுன் வரை போய் வந்துருவேன். பஸ்ஸோ, வாகனவசதியோ இல்லாத காலமது.நடந்துதான் செல்லவேண்டும். இருட்டுவதற்குள் வீடுவந்து சேர்ந்துவிடுவேன்.பொழுதடைந்து மச,மசன்னு இருள்சூழ ஆரம்பிக்கும்போது என்மனதிலும் பொந்திற்குள் நுழையும் பாம்பு போல மெது மெதுவா பயமும் புகுந்து விடும். இப்பொழுது மாதிரி பாத் ரூம் வசதி இல்லாத காலமது. அவசரகாரியங்களுக்கு கண்மாய் கரைக்குத்தான் செல்ல வேண்டும். பகலில் ஆள் நடமாட்டம் ஒன்னு ரெண்டு இருப்பதால் பகலில் தைரியமா தனியே சென்று வென்று வந்துருவேன். இரவானால் சிரமம். அண்ணனோ,அக்காவோ தம்பியோ, தங்கச்சியோ குறைந்தபட்சம் ஒருவராவது கூடவரனும். இருபது முப்பதடி தூரத்தில் அவர்களை நிறுத்திவிட்டு அவர்கள் எனக்கு தெரிகிறமாதிரியும், நான் அவர்களுக்கு தெரியாத மாதிரியுமான 'டெக்னிக்கலான' ஒரு இடத்திலிருந்து போய் வந்துருவேன்.
எங்க ஊர் எல்கையில் ஒத்தையா ஒரு பிள்ளையார் கோவில். பூசாரி யாரும் கிடையாது. ஆனாலும் பிள்ளையார் சந்தோசமா இருக்கிற மாதிரிதான் தோணும். இரவு ஏழு மணிக்கெல்லாம் கிளியாஞ்சட்டியில் விளக்கு மினுக், மினுக்குன்னு எரிய ஆரம்பிச்சுரும். நாள் தவறாமல் பிள்ளையாரை சந்தோசப்படுத்த அழகக்காவால் செய்யப்படும் கைங்கரியம். காதலிக்க நேரமில்லை படத்தை நான் பார்ப்பதற்கு முன்னர் மதுரையில் சென்ட்ரல் தியேட்டரில் பார்த்த துர்க்கா ஆறுமுகத்தால் நாகேஷ் பாலையாவிற்கு கதை சொன்னதை வரிமாறாமல், பாவம் மாறாமல் சொன்னதும் வயிறு வலிக்க நான் சிரித்ததும் அந்த கோயில் வாசலில்தான். சைடில் பெரிய பொட்டல். அந்த பொட்டலில் நான், பின்னாளில் டைரெக்டர் ஆப் மெடிகல் சர்வீஸ் ஆகப்போகிற நாகநாதன், புதுக்கோட்டையில் பேராசிரியராக பணிபுரியப்போகிற சேது ராமலிங்கம், அந்தக்காலத்திலியே துபாய் போய் சம்பாதித்து மூணு நாலு முறை ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவில் அதிக டெபாசிட் போட்டதற்கான பரிசு வாங்கிய சுவடு எதுவும் தெரியாமல் பொழுதுபோக பழைய சின்ன சலூன் கடையை திரும்பவும் ஆரம்பித்து பார்க்கும் போதெல்லாம் அதே பாந்தத்துடன் சிரிக்கப்போகும் பாலுசாமி பூக்கடை வைத்து இப்ப பார்த்தாலும் 'போலீஸ்....' என்றுதொண்டை கிழிய கத்தபோகும் கணபதிராமன் எல்லோரும் சேர்ந்து விளையாடியது அந்த பொட்டலில்தான்.அவன் கத்துவதற்கான அர்த்தத்தை நாங்கள் இருவர் மட்டும்தான் புரிந்துகொண்டோம் என்பதற்கு அடையாளம் எங்களிடையே போய் வரும் சின்ன சிரிப்புதான். அவன் சைக்கிள் ஓட்ட கத்து குடுத்து 'முதுகை வளைக்காதே ...முதுகை வளைக்காதே' ன்னு அடிச்சிக்கிட்டே சைடில் ஓடி வரும்போது எதறக்க காக்கி டிரஸ் போட்டு வந்த பேங்க் வாட்ச் மேனை போலீஸ் என்று பயந்து நான் தலை குப்புற விழுந்ததை 52 வருசமா மறக்க அவனாலும் முடியலை.என்னாலும் முடியலை.
பம்பரம், கிட்டிபுள், பேந்தா, குதிரை சில்,சிங்கி, செதுக்கு முத்து, பச்சைக்குதிரை, அத்திலி, புத்திலி, மக்கான், சுக்கான், பால், பறங்கி, லாட்டுமே, லூட்டுமை, சீ, சல்'ன்னு பத்தாவதாக ' சல்' வருபவன் கண்ணை பொத்திக்கொள்ள மற்றவைங்க ஓடி ஒளிந்து கொள்வது, நொண்டி, கபடி இப்படி பல விளையாட்டு விளாடுவோம்.ஜெயிக்கிறவனுக்கு சந்தோசம், தோக்கிரவனுக்கு சங்கடம். இந்த ரெண்டு உணர்ச்சிதான் எங்களுக்கு தெரியும். யாரு என்ன சாதி.என்ன மதம் ஒரு எழவும் தெரியாது. அம்மா யாரையாவது அண்ணேன்னு கூப்பிட்டா மாமான்னு மொறைவச்சு கூப்பிடுவோம். ஐத்தைன்னு கூப்பிட்டா அப்பத்தான்னு கூப்பிடத்தான் பழகிருந்தோம். இப்ப இருக்கிற சிறுசுகளுக்கு நடிகர் விஜியின் புண்ணியத்திலே கபடி பிரபலமாகிவிட்டது வேறு விளையாட்டை தெரியாது. இப்போ பெரிய முன்னேற்றம் என்னான்னா, கிராமத்தில் கிரிக்கெட் விளையாடறாங்க. ஜாதிக்கு ஒரு பொட்டல்ன்னு, நாலைந்து பொட்டலில் தனித்தனியாக. அரசியல்வாதிகளின் பகுத்தறிவால் ஏற்பட்ட வேறு மாதிரியான விபரீத பரிணாம வளர்ச்சி. கணபதி ராமன் யாருடன் விளையாட பிரியப்படுரானோ இல்லையோ என்னுடன் விளையாட ரொம்ப பிரியப்படுவான். குண்டோ பம்பரமோ நான் ஜெயத்திருந்தாலும் அதட்டிஅவன் ஜெயித்ததாக சொல்லி வாங்கி சென்று விடுவான்.எனது பயத்தை பற்றிய விஷயம் அவனுக்கு எப்படியோ தெரிந்திருக்கிறது.
சந்தோஷ பிள்ளையாரைத் தாண்டினால் டவுன் ஆஸ்பத்திரி முக்குவரை ஆள் அரவம் இருக்காது. இப்ப ரோட்டைத்தவிர இண்டு இடுக்கெல்லாம் மூச்சு முட்ட முட்ட வீடுகளால் நிரப்பப்பட்டு இருக்கிறது. அப்ப இடைப்பட்ட தூரத்தில் இந்தப்பக்கம் ஒரு ஆறேழு புளியமரம். ஒரே ஒரு ஆலமரம். ஒரு பனை மரம். அந்த பக்கம் ஐந்தாறு புளிய மரம். ஒரு புங்க மரம் எல்லாம் போய் பாலத்துக்கு இந்த பக்கம் ஒருபுளியமரம். அந்தப்பக்கம் ஒரு புளியமரம். உனக்கு நான் துணை.எனக்கு நீ துணைன்னு. அவைகளைக் கடக்கும் போது ரொம்ப நாள் கழித்து பாக்கிற உறவினர்களை பார்க்கிற சந்தோஷமும்,பெரு மூச்சும் அடி நெஞ்சில் லேசான வலியும் உணர முடிகிறது.
முக்கியமான விஷயம் என்னான்னா, கிராமத்திலிருந்து ஒன்னாவது கிலோ மீட்டர்லே ஒரு கிறித்துவ சுடுகாடு. அதிலே புதைக்க மட்டும் செய்வதினால் அதிலே எனக்கு பயம் கொஞ்சம் கம்மி. அடுத்தாற்போல் இந்துக்களை எரிக்கவும், புதைப்பதற்குமான சுடுகாடு இருக்கு.
மாசத்துக்கு ஒன்னோ ரெண்டோ எரிஞ்சிட்டிருக்கும். பத்தாதுக்கு அதான் கொள்ளி வாய்ப்பிசாசுன்னு எங்க காலத்து பெருசுகள் சொல்லி வைத்திருந்தாயிங்க. பகல்ன்னாலும் சரி, இரவானாலும் சரி துணையோடு வந்தாலும் ரெண்டையும் ரொம்ப அவஸ்தையோடுதான் கடந்து போவேன். ரெண்டு சுடுகாடுகளின் வாசல்லை எலக்ட்ரிக் போஸ்ட். குண்டு பல்ப் ரெண்டும் ஒத்தை ஒத்தையா ''என்னால் இவ்ளோதான் முடியும்.முடிஞ்சா பார்த்து போய்க்கோன்னு" ராத்ரியிலே வீம்பா தொங்கிட்டிருக்கும். நிலாகாலங்கல்லை பயம் பயம்தான்.இருந்தாலும் கொஞ்சம் பரவால்லை. மற்றைய காலங்களில் குண்டு பல்ப் அண்ணாச்சிகளை தாண்டினால் கும்மிருட்டுத்தான். உத்தேச நடையோடுதான் வீடு வந்து சேர முடியும். சாயந்திரம் ஆறுமணிவரை டவுனிலிருந்து ரெண்டு சுடுகாட்டையும் திக்கி திணறி கடந்து வந்து விடுவேன். அதுக்கு மேலன்னா ஆஸ்பத்ரி முக்குலே வந்து நிப்பேன். ஆணோ, பொண்ணோ யாராவது வர்றாங்களான்னு பாப்பேன். கண்ணில் தட்டு பட்டுவிட்டால் பரீட்சை சமயத்திற்கு மட்டும்தான் திறப்பேன்னு சத்யம் பண்ணியதை மீறி புத்தகத்தை திறந்து ஆழ்ந்து படிப்பது போல் அவர்கள் என்னை கடக்கும் நேரத்தை லேசான சைடு பார்வையால் கவனித்து கொண்டிருப்பேன். முப்பதடி தூரத்தை தாண்டியதும் எதார்த்தமாக வருவது போல் பின்தொடர்ந்து சுடுகாடுகளைக்கடக்கும் போது எதிர் திசையில் முகத்தை வைத்துக்கொண்டு ஊர் வந்து சேர்ந்து விடுவேன். சுடுகாடுகளைக்கடக்கும் போது பெரு மூச்சு ஓன்று வரும்.அந்த நேரத்தில் ஏற்படற சந்தோசத்தை எழுத்துக்களில் கொண்டு வருவது கொஞ்சம் கஷ்டம்தான்.
ஒரு சமயம் டிகிரி ரெண்டாம் வருஷம் படிக்கும்போது டவுனிலிருந்த சித்தப்பா தவறி விட்டார் .அறுபது வயதுதான். சாகக்கூடிய வயசில்லைதான். ஊர் உலகத்திலிருந்து சொந்தங்களின் கூட்டம். அழுது புரண்டார்கள். மாரில் மாறி, மாறி அடித்துக்கொண்ட பெண்கள் கூட்டம். பார்க்க, பார்க்க எனக்கும் அழுகை வந்துவிட்டது. ராத்திரி ஒன்பது மணியாகி விட்டது. உறவுகளின் கூட்டத்தால் சித்தப்பா வீட்டில் படுக்க இடமில்லை. சைக்கிளில் வீடு திரும்ப முடிவு செய்து நம்ம பேவரைட் ஆஸ்பத்ரி முக்கு வரை வந்து விட்டேன். சைக்கிள் செயின் கழண்டுவிட்டது போல் கையால் பெடலை சும்மா சுத்துநேனே தவிர கவனமெல்லாம் யாராவது வருகிறார்களா என்பதிலேதான் இருந்தது. ரொம்ப நேரம் பார்த்தேன். ஒரு சுடுகுஞ்சியும் காணவில்லை. இனி வேலைக்காகாதுன்னு முடிவு செய்து செகண்ட் சோ பார்த்து விட்டு கிராமத்திற்கு திரும்புவதை அப்புறம் முடிவு செய்யலாம்ன்னு டவுன்னில் இருக்கும் தியேட்டர் வரை வந்து விட்டேன்.சொந்தக்காரைங்க யாராவது பார்த்தால் காறி துப்பி விடுவார்களோன்னு பயம் வேறே. நல்லா ஞாபகம் இருக்கு. இருமலர்கள்-சிவாஜி, பத்மினி, சரோஜாதேவி நடித்தது. பெல் அடிக்கும் வரை காத்திருந்தேன். 30 பைசா, 46 பைசா, 75 பைசா, ரூ.1.25 இப்படி தியட்டரில் நாலு வகுப்பு. மத்ததெல்லாம் ஏதோ நியாயம்.அதென்ன 46 பைசா. தெரிந்தவர்கள் சொன்னால் ரொம்ப நாள் பிரச்சனைக்கு எனக்கொரு முடிவு கிடைக்கும். அய்யா அப்ப காலேஜில் படிப்பதால் முதல் வகுப்பிற்கு குறைந்து போவதில்லை. கடைசி வகுப்பில் இருப்பதால் முன்னாள் இருக்கும் வகுப்பில் இருப்பவர்கள் லேசு வாசாகத்தெரிந்தார்கள். கூர்ந்து பார்த்தேன். கேதத்துக்கு வந்திருந்த ஆணு,பொண்ணு பாதிப்பேரு அங்கதான் இருந்தாங்கே. காலம்தான் மனப் புண்ணை ஆற்றும் என்று கேள்வி பட்டிருக்கேன். ஒரு ஆறுமணி நேரத்திற்கே அவ்வளவு பவர் இருந்ததையும், சித்தப்பா பாதி தூரம் போவதற்குள்ளேயே இப்படி ஆத்தும் என்பதையும் என்னால் நம்பத்தான் முடியவில்லை. ஒருத்தனுக்கும் தெரியாமல் படம் பார்க்காமல் சைககிளை எடுத்துக்கொண்டு கேத வீட்டில் இருந்த அம்மாவிடம் சென்று பின்னால் உட்கார்ந்து கொள்ளுங்கள் வீட்டிற்கு ரெண்டு பேரும் போய் விடுவோம்ன்னுசொன்ன போது சொந்தங்க தப்பா நினைப்பார்கலப்பா; நீன்னா போப்பான்னு சொன்னபோது தியேட்டரில் பார்த்ததை சொல்ல ஏனோ மனம் வரவில்லை. வெக்கத்தை விட்டு சுடுகாட்டை தாண்டிபோக முடியாத எனது இயலாமையை அம்மாவிடம் அப்பொழுதுதான் சொன்னேன். என்னை ஒரு பார்வை பார்த்தார்கள்.அதில் இரக்கம் இருந்ததா,கோபம் இருந்ததா வருத்தம் இருந்ததா சரியாக தெரியவில்லை.
அடுத்தநாள் அதி காலையில் என்னை எழுப்பி வீட்டிற்கு கூட்டி வந்து தலையில் எண்ணெய் தேய்த்து குளிப்பாட்டி ஈரத்துண்டுடன் வீட்டில் இருந்த கோயில் வீட்டிற்க்குள் போகாமல் வாசல் படியில் நிறுத்தி நாலு இஞ்சுக்கு நாலு இஞ்சு அளவுள்ள ஒரு வெல்வெட் கலர் சின்ன பெட்டியை கொடுத்தார்கள். குறுக்கேயும் நெடுக்கேயும் கருப்பு கயிறால் கட்டப்பட்டிருந்தது. 'சாமியை கும்பிட்டு பையில் வைத்து கொள் .காத்து கருப்பு உன்னை அண்டாது' என்றார்கள்.
எங்க அம்மா கிராமத்து மனுசிதான். பாதி வைத்தியர். கிராமத்து சிறுகுழந்தைகளுக்கு ஏராளமான வயிற்று உபாதைகள், சீதள நோய் பசியின்மையை போக்கியவர். பரோபகாரி. அப்பாவின் மதி மற்றும் நிதி மந்திரி. அம்மாவை குளிப்பாட்டி வைத்திருக்கும் போது பெரிய மாலையை போட்டு 'பஞ்ச காலத்திலே எம் பிள்ளைகளுக்கெல்லாம் பிள்ளை சோறு கொடுத்த தெய்வமப்பா'ன்னு மாணிக்க தேவர் அழுது சொன்னதை என்னால் இன்னும் மறக்க முடியவில்லை.
அம்மா கொடுத்த வெல்வெட் பெட்டியை பையில் வைத்து கொண்டு நான் முதலில் விளையாட கூப்பிட்டது கணபதி ராமனைத்தான். குண்டு, பம்பரம் இத்யாதிலிருந்து நாங்கள் டென்னி கேட்டுக்கு மாறி இருந்தோம். அது நான் கொஞ்சம் நல்லா விளாடுவேன். ஓங்கி நான் கட் அடிக்கும் போது தரையில் விழறதுக்கு முன்னாலே 'அவுட்' என்று அவன் வழக்கம்போல் கத்த 'நாயே, செருப்பு பிஞ்சிரும்.நல்லா பாரு கோட்டுக்குள்ளேதான் விழுந்துருக்குன்னு' நான் கட்டை தொண்டையில் திரும்ப கத்திய போது என்னை ஒரு மாதிரியா பார்த்துட்டு 'ஆமாம்'ன்னு ஒத்துக்கிட்டான். பெட்டி வேலை செய்வதை என்னால் உணர முடிந்தது. அதிலே இருந்து கொஞ்சம் கொஞ்சமாக முன்னேற்றம். இப்பெல்லாம் இரவு நேரங்களில் பேன்ட் பையிலிருந்த பெட்டியை இருகப்பற்றிகொண்டு சுடுகாடுகளைக் கடந்து விடுவேன். முக்கியாமான விஷயம், சுடுகாடுகளை பார்த்துகொண்டே கடக்கவும் தைரியம் வந்தது.
இப்ப வெளியே போனால் செல் போனை தேடுவோமே, அது மாதிரி வெல்வெட்டை தேட ஆரம்பித்தது மனசு. அப்புறம் கொஞ்சம் கொஞ்சமாக பெட்டி இல்லாமலே வெளியே போக பழக ஆரம்பித்தது. என்ன ஒரு தைரியமுன்னா ,பவரான பெட்டி வீட்டில் இருந்தாலும் காப்பாற்றத்தானே செய்யும் என்ற நம்பிக்கையில். அப்புறம் காலத்திற்குத்தான் யாருட்டையும் சொல்லிட்டு போகணும்ன்னு ஒரு விவஸ்தை இல்லியே. உருண்டு....ஓடி.......போயிருச்சு.
அம்மாவுக்கு எழுவது வயதிருக்கும். அவரது தகப்பன் போன்ற மாமனாரின் வெத்தலை உலக்கையை வைத்து இடித்து வீட்டில் வெத்தலை போட்டுகொண்டிருந்தது. நான் சாமி கும்பிட்டு கொண்டிருந்தேன். சாமி படத்திற்கு பக்கத்தில் இத்து போன கருப்பு கயிறுகளுடன் அதே வெல்வெட் பெட்டி. அதைத் தொட்டு கும்பிடும் பொழுது தவறி விழுந்து பெட்டி திறந்து கொண்டது. உள்ளே சின்னதா ஒடைந்த கண்ணாடி சில்லு. 'என்னம்மா இதுன்னு' நான் கேட்ட போது அப்பா இறந்த பின்னர் கெக்கை போட்டு கடகாப்பல்லு இருந்த இடம் தெரிய அம்மா சிரித்ததை அதற்கு முன் நான் பார்த்ததில்லை. ‘உங்கப்பா கல்யாணமாகி முத முதல்லே வாங்கி கொடுத்த தோடு இருந்த பெட்டிப்பா. அது உங்க அப்பாவோட உடைந்த கண்ணாடிப்பா'.
அம்மா இறந்த ஏழு வருஷம் கழித்து ரிட்டயர் ஆயி சிவனேன்னு வீட்டில் இருந்த போது அமெரிக்கா வந்துதான் ஆகனும்ன்னு பிளைட் டிக்கெட் வாங்கி பையன் அனுப்பிய போது தட்ட முடியவில்லை. பைக்கில்பின்னால் உட்கார்ந்து போகவே பயப்புடும் நான் பிளைட்டில் செல்ல வெல்வெட்டு பெட்டிக்குபதிலாக கூட எடுத்து வந்தது 'காயத்ரி மந்திரமும்''ராம ஜெயமும்தான்'.